சிட்னியின் உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பேரை ஆஸ்திரேலிய போலீசார் காவலில் எடுத்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக போலீசார் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதியை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் வலியுறுத்தப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக போலீசார் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதியை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் வலியுறுத்தப்பட்டது.“போண்டி கடற்கரையில் உருவான தீவிர சூழ்நிலைக்கு போலீசார் பதிலளித்து வருகின்றனர். பொதுமக்கள் அந்தப் பகுதியை அணுக வேண்டாம். அங்கு இருப்பவர்கள் உடனடியாக தஞ்சம் அடைய வேண்டும்” என்று நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயங்கள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தின் காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி போண்டி கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply