சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

மாலத்தீவின் வாவு அடோல் பகுதியில் உள்ள ஆழ்கடல் குகையை ஆய்வு செய்யச் சென்றபோது உயிரிழந்த ஐந்து இத்தாலிய டைவர்களில் இருவரின் உடல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஆபத்தான கடலடிக் குகையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பல நாட்களாக கடுமையான மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்லாந்தைச் சேர்ந்த சிறப்பு குகை டைவர்களின் உதவியுடன் உடல்கள் மேலே கொண்டு வரப்பட்டன.

உயிரிழந்தவர்களில் ஜெனோவா பல்கலைக்கழக பேராசிரியரும் கடல் உயிரியல் நிபுணருமான மோனிகா மொன்டெஃபால்கோனே அவரது மகள் மற்றும் மற்ற ஆய்வாளர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் மீட்பு பணியில் ஈடுபட்ட மாலத்தீவு இராணுவ டைவர் ஒருவரும் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் மாலத்தீவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஸ்கூபா டைவிங் விபத்தாகக் கருதப்படுகிறது. டைவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்திற்கு சென்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading