லாவோஸின் Xaisomboun மாகாணத்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் பல நாட்களாக சிக்கியிருந்த கிராமவாசிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமான காட்சிகள் பதிவாகியுள்ளன. கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குகைக்குள் சிக்கியிருந்த ஏழு பேரில் மீட்புக் குழுவினர் முன்னதாக ஒருவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததையடுத்து மேலும் நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளியே வந்தபோது மீட்புப் பணியாளர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து கொண்டாடியதுடன் குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர்.
இந்த ஆபத்தான மீட்புப் பணியில் லாவோஸ் தாய்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அனுபவமிக்க நீர்மூழ்கல் நிபுணர்கள் பங்கேற்றனர். குறுகிய சேறும் நீரும் நிரம்பிய பாதைகள் குறைந்த பார்வைத்திறன் மற்றும் ஆபத்தான குகை அமைப்பு காரணமாக மீட்பு நடவடிக்கை மிகுந்த சவாலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததையடுத்து உலகம் முழுவதும் இந்த மீட்பு நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. அதேவேளை காணாமல் போயுள்ள இன்னும் இரு பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





Leave a Reply