அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள நிலையில் “வார்த்தைகள் அல்ல நடைமுறை நடவடிக்கைகளே தேவை” என ஈரான் பதிலளித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிக்கும் முன்மொழிவு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிவித்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெறக்கூடாது ஹோர்முஸ் நீரிணை எந்தக் கட்டணமும் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் மீது இரு தரப்புக்கும் இன்னும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
ஈரான் தரப்பு எந்த ஒப்பந்தமும் வெறும் அறிவிப்புகளால் அல்லாது தடைகள் நீக்கம் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிப்பு மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குறைப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் ஈரான் மற்றும் ஓமான் இணைந்து தீர்மானிக்க வேண்டிய விடயமாகும் என்றும் அணு விவகாரம் தற்போதைய பேச்சுவார்த்தையின் பகுதியாக இல்லை என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சாத்தியமான ஒப்பந்தம் குறித்த செய்திகளால் உலக எண்ணெய் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் மத்திய கிழக்கு நிலவரம் மீதான சர்வதேச கவனமும் அதிகரித்துள்ளது.





Leave a Reply