ஜெர்மனியில் அகதி விண்ணப்பங்கள் குறைந்தாலும் எல்லை கட்டுப்பாடுகள் தொடரும்

ஜெர்மனியில் அகதி (asylum) விண்ணப்பங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள போதிலும் நாட்டின் எல்லை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் டோப்ரிண்ட் தெரிவித்ததாவது 2026 ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக விண்ணப்பித்த அகதிகளின் எண்ணிக்கை 2021க்கு பிறகு மிகக் குறைந்த அளவாக (சுமார் 6,144) பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது கணிசமான சரிவாகும். இவ்வாறான குறைவு இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை எல்லைச் சோதனைகள் தளர்த்தப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் எல்லை பகுதிகளில் காவல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 2,300 பேர் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடுமையான குடியேற்றக் கொள்கை சிலரால் ஆதரிக்கப்படுகின்ற போதிலும் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட சில அகதிகளை ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் தொடரும் என்று ஜெர்மனி உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading