சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

UK Tamil News, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக குடியேறிகளை கடத்தியதாக தண்டனை பெற்ற முக்கிய மனிதக் கடத்தல்காரர் ஒருவர் போலி அடையாளத்தை பயன்படுத்தி இங்கிலாந்தில் வாழ்ந்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ட்வானா ஜமால் (Twana Jamal) என்பவர் பிரான்சில் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் வேறு பெயரில் இங்கிலாந்திற்குள் நுழைந்து அங்கு புகலிடம் கோரி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லெஸ்டர்ஷையர் (Leicestershire) பகுதியில் வசித்து சட்டவிரோதமாக வேலை செய்ததுடன் போலி அடையாள ஆவணங்களையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிரான்சில் கலே (Calais) முகாம்களின் காட்ஃபாதர் என்று அழைக்கப்பட்ட ஜமால் 2010களில் ஆங்கிலக் கால்வாய் வழியாக நூற்றுக்கணக்கான புலம்பெயர்வோரைக் கடத்திய வலையமைப்பின் தலைவராக இருந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. UK Tamil News.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு சம்பவம் குறித்து அவசர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அதேவேளை பிரெக்சிட்டிற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில முக்கிய குற்றவியல் தரவுத்தளங்களை இங்கிலாந்து அணுக முடியாத நிலை ஏற்பட்டதால் வெளிநாடுகளில் குற்றப் பதிவுகள் உள்ள சிலர் போலி அடையாளத்தில் நாட்டுக்குள் நுழைவதை கண்டறிவது கடினமாகியுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்