2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அடைய இங்கிலீஷ் சேனலை (English Channel) சிறிய படகுகளில் கடக்க முயன்ற 6,177க்கும் மேற்பட்ட அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று பிரான்ஸ் கடல் பாதுகாப்புத் துறை (PREMAR) தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஆபத்தான பயணத்தின் போது 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பதும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

பல ஆண்டுகளாகவே பிரான்ஸ் இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பும் அகதிகளுக்கான முக்கிய துவக்க மையமாக இருந்து வருகிறது. இங்கிலாந்தில் சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆசியா ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அகதிகள் கடும் அபாயங்களை மீறி இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இங்கிலாந்தில் தற்போது ஆட்சியில் உள்ள Labour (மைய-இடதுசாரி) அரசு அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கடுமையான குடியேற்ற எதிர்ப்பு வலதுசாரி அரசியல் அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருகிறது.

பிரான்ஸ் கடல் பாதுகாப்புத் துறை கூறுகையில் பாதுகாப்பற்ற மிகச் சிறிய படகுகளில் பயணம் செய்வது மிகப்பெரிய அபாயமாக இருந்தாலும் அகதிகள் முயற்சிகள் குறையவில்லை என்று தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் 795 படகுகளில் சுமார் 50,000 பேர் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்தை நோக்கி இங்கிலீஷ் சேனலை கடக்க முயன்றுள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் கடும் காற்று, உயர்ந்த அலைகள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத படகுகள் ஆகிய காரணங்களால் இந்த பயணம் மிகவும் உயிருக்கு ஆபத்தானதாக உள்ளது. இருப்பினும், வறுமை, போர், அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தாய்நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் உயிரை பணயம் வைத்து இந்த கடல் பயணத்தை தொடர்வது ஐரோப்பாவில் அகதி பிரச்சனை இன்னும் தீவிரமாக உள்ளதை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading