இந்து ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருக்கான சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று கடந்த 17ஆம் திகதி சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குப் பொருந்தும் சட்ட ஏற்பாடுகள் 1917ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பிரதேச செயலாளர்களின் பொறுப்புகள் மற்றும் தர்ம நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
வளவாளராக சட்டத்தரணி வி.எஸ். கணேசராஜன் கலந்துகொண்டு சட்ட ரீதியான வழிகாட்டல்களை வழங்கினார். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன் இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப. சத்தியநாதன் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் மற்றும் சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கேற்று கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.





Leave a Reply