
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை, கலே நகருக்கு அருகிலுள்ள கிராவ்லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள Aa கால்வாயில் நடைபெற்றது. அங்கு அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் “டாக்சி-போட்” எனப்படும் காற்று நிரப்பப்பட்ட சிறிய படகை பிரான்ஸ் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து கடலுக்குள் செல்லும் முன்பே படகில் ஏறி சோதனை செய்தனர்.
இந்த படகு கடலில் பெரிய படகுடன் இணைந்து மனிதர்களை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் கடலுக்கு செல்லும் முன்பே கால்வாய்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளில் இப்படகுகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் பிரான்ஸ் காவல் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனிதக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கும் ஆங்கிலக் கால்வாயில் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கிலாந்து–பிரான்ஸ் அரசுகள் இணைந்து கண்காணிப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் திரும்பப்பெறும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும், வருங்காலங்களில் கலே மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























