Tag: அகதி செய்திகள்
குடியேற்ற விதிமுறைகள்,ஐரோப்பிய பாராளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) சட்டபூர்வமாக தங்கும் உரிமை இல்லாத மூன்றாம் நாடு குடிமக்களை விரைவாக நாடு கடத்துவதற்கான புதிய Return Regulation விதிமுறைகளை அங்கீகரித்துள்ளது. இந்த புதிய சட்டம் உறுப்புநாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடைமுறைகளை எளிமையாக்குவதோடு நாடுகடத்தல் உத்தரவுகளை பரஸ்பரம் அங்கீகரிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது. மேலும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் அல்லது தப்பிச் செல்லும் அபாயம் உள்ளவர்கள் 24 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அமைக்கப்படும் […]
ஸ்பெயின் அரசு 2026 ஆம் ஆண்டில் ஆவணங்களின்றி நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட சட்டபூர்வ குடியிருப்பு அனுமதி (Extraordinary Regularization) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 500,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது 2026 ஜனவரி 1க்கு முன்பு ஸ்பெயினில் இருந்ததை நிரூபிக்கக்கூடியவர்கள் குறைந்தது 5 மாதங்கள் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்தவர்கள் மற்றும் குற்றப் பதிவுகள் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியும். சில அகதி கோரிக்கை செய்தவர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக அனுமதி […]
ஜெர்மனியில் அகதிகள் மற்றும் குடியேற்ற தொடர்பான அரசுச் செலவுகள் 2025ஆம் ஆண்டில் €24.8 பில்லியனாக குறைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் €3.2 பில்லியன் குறைவாகும். அகதி வருகைகள் குறைந்ததும் சில ஒருங்கிணைப்பு மற்றும் உதவி திட்டங்களில் செலவுகள் குறைக்கப்பட்டதும் இதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. 2024 மற்றும் 2025 காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் முறையாக அகதி பாதுகாப்பு கோரும் விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக Eurostat தரவுகளும் காட்டுகின்றன. இருப்பினும் […]
நிராகரிக்கப்பட்ட அகதி களை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப புதிய திட்டம் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அகதி மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் Third-Country Return Hubs எனப்படும் மையங்களுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய கவுன்சில் உறுப்புநாடுகள் மால்டோவாவில் நடைபெற்ற சந்திப்பில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டவர்களை நேரடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப […]
பிரான்ஸ் தேசிய சபை, “பொது பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள்” என கருதப்படும் ஆவணமற்ற வெளிநாட்டவர்களை அதிகபட்சம் 7 மாதங்கள் (210 நாட்கள்) வரை நிர்வாக தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு முன்பு இந்த நீண்டகால தடுப்பு நடைமுறை பெரும்பாலும் தீவிரவாத வழக்குகளுக்கே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கொலை, பாலியல் வன்கொடுமை, கடுமையான வன்முறை மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய மற்றும் […]
ஐரோப்பிய ஒன்றியம் – Return Hub மையங்கள் அமைக்க திட்டம் (EU) நிராகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேற்றவர்களை ஐரோப்பாவுக்கு வெளியே அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக “Return Hub” எனப்படும் மையங்களை அமைக்க 12 நாடுகளை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மையங்களில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவர். தற்போதைய தரவுகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டவர்களில் சுமார் 20% […]
குடியேற்றக் கொள்கைகள் – கேள்விக்குறியாகும் டென்மார்க் அகதிகளின் வாழ்க்கை. டென்மார்க் நாட்டின் Avnstrup return center எனப்படும் திரும்பும் மையத்தில் பல வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக உறுதியற்ற (“limbo”) நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மையத்தில் பொதுவாக தங்கும் நபர்கள் தஞ்சம் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டப்படி நாட்டில் தங்க அனுமதி இழந்தவர்கள் ஆகும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையும் டென்மார்க் நாட்டில் நிரந்தரமாக வாழ அனுமதி இல்லாத நிலையும் காரணமாக […]
சுவிட்சர்லாந்து அகதி வருகை குறைவு 2026. சுவிட்சர்லாந்தின் மாநில குடியேற்ற செயலகம் (SEM) அகதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக 83 பணியிடங்களை குறைத்துள்ளது. இதில் 60 பணியிடங்கள் அகதி விண்ணப்பங்களை செயல்படுத்தும் பிரிவிலும் மேலும் 23 பணியிடங்கள் “Protection Status S” தொடர்பான வழக்குகளை கையாளும் பிரிவிலும் இடம்பெற்றிருந்தன. இந்த பணியிடங்கள் முன்பு அதிக அளவில் வந்த அகதி விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்த தற்காலிகமாக உருவாக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலங்களில் சுவிட்சர்லாந்து அகதி […]
2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அடைய இங்கிலீஷ் சேனலை (English Channel) சிறிய படகுகளில் கடக்க முயன்ற 6,177க்கும் மேற்பட்ட அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று பிரான்ஸ் கடல் பாதுகாப்புத் துறை (PREMAR) தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆபத்தான பயணத்தின் போது 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பதும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. பல ஆண்டுகளாகவே பிரான்ஸ் இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பும் அகதிகளுக்கான முக்கிய […]
இங்கிலாந்து நோக்கி நடைபெறும் சட்டவிரோத சிறிய படகு பயணங்களை தடுக்கும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து மேற்கொண்டு வரும் புதிய பாதுகாப்பு தந்திரத்தின் கீழ் பிரான்ஸ் அதிகாரிகள் நீரிலேயே (on-water) சந்தேகத்திற்குரிய மனிதக் கடத்தல் படகை முதல் முறையாக தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை, கலே நகருக்கு அருகிலுள்ள கிராவ்லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள Aa கால்வாயில் நடைபெற்றது. அங்கு அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் “டாக்சி-போட்” எனப்படும் […]