நிராகரிக்கப்பட்ட அகதி களை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப புதிய திட்டம்
பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அகதி மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் Third-Country Return Hubs எனப்படும் மையங்களுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய கவுன்சில் உறுப்புநாடுகள் மால்டோவாவில் நடைபெற்ற சந்திப்பில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டவர்களை நேரடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாத சூழலில் ருவாண்டா, கானா, துனிசியா, உகாண்டா போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளில் தற்காலிக மையங்களில் தங்கவைத்து பின்னர் நாடுகடத்தும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. ஜெர்மனி, டென்மார்க், கிரீஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பிரிட்டனின் ருவாண்டா திட்டம் சட்ட சிக்கல்களால் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய ஐரோப்பிய அளவிலான அணுகுமுறையின் மூலம் illegal migration ஐ கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கை அகதிகளின் உரிமைகளை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் human rights black holes போன்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளன.





Leave a Reply