இலங்கையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், Raize ரக வாகனத்தின் விலை 8 முதல் 10 இலட்சம் ரூபாயாலும் Vezel ரக வாகனத்தின் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், Yaris ரக வாகனத்தின் விலை 5 இலட்சம் ரூபாய் வரையிலும் சொகுசு காரான Land Cruiser இன் விலை சுமார் 30 இலட்சம் ரூபாயாலும் உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விலை அதிகரிப்பு இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.





Leave a Reply