உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதால் இலங்கையில் அடுத்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முன்பிருந்த அளவிற்கு உலக சந்தை விலைகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார். இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உலக சந்தை நிலவரம் மற்றும் பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





Leave a Reply