உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களும் இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எரிபொருள் செலவு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் அதன் நன்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் வரி மற்றும் எரிபொருள் செலவுகள் மூலம் மக்கள்மீது மேலும் சுமை ஏற்றாமல் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







Leave a Reply