ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் தொலைபேசி எண்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பயன்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை விபரங்களை புதுப்பிக்க அல்லது சரிபார்க்க வருமாறு போலி அழைப்புகள் அனுப்பப்படுகின்றன.
பெறுநர்களின் பெயர் முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறுவதால் பலர் இவற்றை உண்மையான தகவல்களாக நம்புகின்றனர். பின்னர் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைக்கும் நபர்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (OTP) உள்ளிட்ட வங்கி தகவல்கள் பெறப்பட்டு அவர்களின் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது.
ஆட்பதிவுத் திணைக்களம் ஒருபோதும் வாட்ஸ்அப் மூலம் இவ்வாறான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதால் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மற்றும் தொலைபேசி எண்களை தவிர்க்குமாறும் OTP உள்ளிட்ட ரகசிய தகவல்களை எவருடனும் பகிர வேண்டாமென்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







Leave a Reply