ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தற்காலிகமாகத் தடைசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற உத்தரவு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.













Leave a Reply