ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி சில்வா ஆணைக்குழு அறிக்கையில் ஷானி அபேசேகரவுக்கு எதிராக எந்தவித பரிந்துரையும் இடம்பெறவில்லை என்றும், மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் அசாத் மௌலானா தமக்குத் தெரியாது என்ற கோட்டாபய ராஜபக்சவின் வாதத்தை ஏற்க முடியாது என்றும், அவர் முன்னாள் கிழக்கு மாகாண அரசியல்வாதி பிள்ளையனின் செயலாளராக இருந்ததால் அவரை அறியாததாகக் கூறுவது நம்பகமற்றது என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் சிக்கலான கட்டத்தில் தொடர்வதாகவும் முக்கிய காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம் இரகசிய உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதால் விசாரணை விரிவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ள நிவாரணத்தை தற்போது வழங்க முடியாது என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.































