இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் தன்னை கைது செய்வதைத் தடுக்க சட்டரீதியான பாதுகாப்பை நாடி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த கட்ட பரிசீலனை மற்றும் தீர்மானம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.





























