கோட்டாபய மனு விசாரணை ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து […]
