முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அவரிடம் முக்கிய தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பதவி வகித்ததுடன் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக அந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய தகவல்களை அறிந்திருக்கக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பும் அவர் சாட்சியம் வழங்கியிருந்ததை நினைவூட்டிய அமைச்சர் அவரது மரணம் தொடர்பான காவல்துறை விசாரணைகள் இன்னும் நிறைவடையாததால் எந்தவித ஊகங்களுக்கும் இடமளிக்காமல் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை பொறுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













Leave a Reply