Tag: Political News
Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]
Archchuna Warrant, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணை தொடர்பான விவகாரம் சபையில் எழுப்பப்பட்டதை அடுத்து ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முழுமையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என சில […]
அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]
Sri Lanka News, சீன நாட்டவருக்கு சொந்தமான ரூ.20 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 21 வயதுடைய மகனை கொழும்பு கொல்லுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பொலிஸாரின் தகவலின்படி கடந்த ஜூலை 13 அன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபராக அடையாளம் […]
Sri Lanka News, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தாம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிடும்போது நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓஷல […]
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அவரிடம் முக்கிய தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பதவி வகித்ததுடன் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக அந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய […]
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மர்ம மரணங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்த டேன் பிரியசாதின் மரணம் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் அதிகாரியின் உயிரிழப்பு மற்றும் 2.5 […]
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் […]
Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]
தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் அரசியல் எதிரிகளையும் எதிர்க்கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையே பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்படுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன குற்றஞ்சாட்டியுள்ளார். காலி பத்தேகம பகுதியில் நேற்று (05) நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் விவசாயிகளையும், “டெங்கு நுளம்புகளைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என […]