கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறினார். பின்னர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற சில தரப்பினருக்கிடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமை மேலும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதுடன் கூட்டமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.













Leave a Reply