மேலும் “நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் வேண்டுமென்றால் கழற்றிக் காண்பிக்கவா?” என ஆவேசமாகக் கூறியதால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலையிட்ட சபாநாயகர் ஆடை தொடர்பான விவாதம் தேவையற்றது என்றும் அது சபையின் முக்கிய பிரச்சினையல்ல என்றும் தெரிவித்ததுடன் அர்ச்சுனா எம்.பி. தனது ஒழுங்குப் பிரச்சினையை தொடர்ந்தும் முன்வைக்க அனுமதி வழங்கினார். இந்த சம்பவம் நாடாளுமன்ற அமர்வில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது.
அர்ச்சுனா எம்.பி. கருத்தால் பரபரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தாம் அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பாக எழுந்த எதிர்ப்புக்கு ஆவேசமாக பதிலளித்த சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனா அணிந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக பதிலளித்த அர்ச்சுனா தாம் நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
































