யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணிகளுடன் மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 130 பிற சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் பங்கேற்று வருகின்றனர்.













Leave a Reply