யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆய்வில் மொத்தம் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டவற்றில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் மற்றொரு மனித எலும்புக்கூடும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 255 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 249 முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணியில் கருப்பு நிற மண்ணில் எரிந்த எலும்புத் துண்டுகள், நாணயக் குற்றிகள், உடைந்த மூக்குத்தி போன்ற தங்க ஆபரணம், ஆணிகள் மற்றும் மரப்பெட்டியின் சிதைவுகள் போன்ற சான்றுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழந்தையின் எலும்புக்கூடு மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அதை தனியாக பிரித்தெடுக்க முடியாமல் பாதுகாப்பு காரணங்களுக்காக பேண்டேஜ் துணிகளால் சுற்றி மண்ணுடன் சேர்த்து அகழ்ந்தெடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்









Leave a Reply