Tag: Political News
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்றும் தற்போதுள்ள சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவாக நடத்த […]
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை (Online) வழியாக சாட்சியம் வழங்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தின் ஆவரங்கால் பகுதியில் மர்மமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கு […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் உருவாக்கியிருந்த சுமார் 1.776 பில்லியன் டாலர் மதிப்பிலான “Anti-Weaponization Fund” (அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிதி) திட்டத்திற்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிக தடை விதித்துள்ளார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசியல் நோக்கில் அரசு அமைப்புகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு இந்நிதி மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதி உருவாக்கத்திற்கு சட்ட அடிப்படை கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் […]
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவத்தினர் எந்தவிதமான சாதகமான பதிலும் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு சில விடயங்கள் “பரிசீலிப்போம்” என தள்ளிப்போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டத்திற்குப் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியது […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் போருக்கு முடிவுகாணும் முயற்சிகள் இன்னும் உறுதியற்ற நிலையில் இருக்கும் சூழலில் தனது அமைச்சரவையுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேச்சுவார்த்தை செய்யப்பட்டுள்ளதாக முன்பு கூறியிருந்த டிரம்ப் தற்போது “முழுமையான மற்றும் சரியான ஒப்பந்தம்” மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என வலியுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஈரான் போர் நிலைமை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆயுத கையிருப்புகள் குடியேற்றக் கொள்கைகள் சமூக பாதுகாப்பு மோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் […]
ஜனாதிபதி Anura Kumara Dissanayake எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. விஜயத்தின் முதல் கட்டமாக மே 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம […]
மாகாண சபைத் தேர்தல் எவ்வித தாமதமுமின்றி இந்த ஆண்டிற்குள்ளேயே நிச்சயமாக நடத்தப்படும் என Krishantha Abeysena தெரிவித்துள்ளார். Kandy நகரில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் “மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சில நிர்வாக […]
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) முதல் தேர்தல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை இன்னும் எட்ட முடியாமல் உள்ளது. 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மை அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது TVK 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் ஆதரவு உள்ளிட்ட கூட்டணிகளுடன் இணைந்தாலும் இன்னும் சுமார் 5 முதல் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாக […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் சூழலில் த.வெ.க. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து […]