மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு முன்னிலையாகி, சட்ட சிக்கல்களுக்கு தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கும் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மூன்று முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்ட ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார். விசேட செயற்குழு தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த பின்னர் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எந்த தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அதன் பின்னரே தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் செயற்குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.





























