அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் உருவாக்கியிருந்த சுமார் 1.776 பில்லியன் டாலர் மதிப்பிலான “Anti-Weaponization Fund” (அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிதி) திட்டத்திற்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிக தடை விதித்துள்ளார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசியல் நோக்கில் அரசு அமைப்புகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு இந்நிதி மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிதி உருவாக்கத்திற்கு சட்ட அடிப்படை கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குற்றம்சாட்டி “Democracy Forward” உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து நீதிபதி லியோனி பிரிங்கெமா நிதி அமைப்பது அல்லது கோரிக்கைகளை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.
டிரம்பின் வரி அறிக்கை கசிவு தொடர்பாக IRS மீது தொடரப்பட்ட வழக்கின் சமரசத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி 6 காபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களும் கூட இந்நிதியில் பயன் பெறக்கூடும் என்ற அச்சம் காரணமாக திட்டம் கடும் அரசியல் மற்றும் சட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 12 அன்று நடைபெற உள்ளது.





Leave a Reply