அமெரிக்காவில் தக்காளி விலை கடந்த ஒரு ஆண்டில் சுமார் 40 சதவீதம் உயர்ந்து, அன்றாட உணவுப் பொருட்களில் மிக வேகமாக விலை ஏறிய பொருளாக மாறியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் புதிய அடையாளமாக தக்காளி பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
குறிப்பாக மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிகளுக்கான வரி உயர்வு மற்றும் உலகளாவிய பதற்றங்களால் ஏற்பட்ட எரிபொருள் போக்குவரத்து செலவுகள் விலையை மேலும் தூண்டியுள்ளன. அமெரிக்காவின் பெரும்பாலான தக்காளி தேவைகள் மெக்சிகோவை சார்ந்துள்ளதால் புதிய வரிகள் நேரடியாக சந்தை விலையை பாதித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் உணவகங்கள் உணவுத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ஒரு பவுண்ட் தக்காளி 8 டாலர் வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் விளைச்சல் சந்தைக்கு வரும் காலகட்டத்தில் விலைகள் ஓரளவு குறையலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.





Leave a Reply