கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பு ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வரை விமான நிலையத்தில் 27 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 22 வழக்குகள் சஹார் காவல் நிலையத்திலும், 5 வழக்குகள் விமான நிலைய காவல் நிலையத்திலும் விசாரணையில் உள்ளன.
நியூயார்க் சென்ற மாணவரின் பணம் மாயம்
சமீபத்திய சம்பவத்தில், தாதரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஒருவர் தனது மகனின் கைப்பையில் இருந்த 5,000 அமெரிக்க டாலர் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். அவரது மகன் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் படிப்புக்காக நியூயார்க் சென்றிருந்தார்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இரவு 9 மணியளவில் பாதுகாப்புச் சோதனைக்காக கைப்பையைத் தட்டில் வைத்ததாகவும், பின்னர் ஏர் இந்தியா AI119 விமானத்தில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் பணம் காணாமல் போனது தெரியவந்தது. பயணம் முழுவதும் கைப்பை தன்னிடமே இருந்ததாக மாணவர் கூறியுள்ளார்.
சஹார் போலீஸார் விமான நிலைய CCTV காட்சிகளைப் பெற்று விசாரித்து வருகின்றனர். ஏர் இந்தியா ஊழியர்கள், சரக்கு கையாளுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பிற பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த 10 நாட்களில் பதிவான நான்காவது திருட்டுச் சம்பவம் இதுவாகும். Mumbai airport baggage theft தொடர்பாக பயணிகள், விமான ஊழியர்கள், சுமைத் தூக்குவோர் உள்ளிட்டோரின் நடமாட்டத்தையும் குற்றப்பிரிவு ஆய்வு செய்கிறது.
































