உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் வினீத் மினோச்சா (63), தனது வீட்டில் 26 முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விசாரணையில், வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், முன்னாள் வேலைக்காரர் விஷாலும் அவரது கூட்டாளி ராஜ் கிஷோரும் அங்கு வந்து சென்றதை கண்டறிந்தனர்.
ரூ.6 லட்சம் கொலை ஒப்பந்தம் என போலீஸார் தகவல்
விசாரணையில், ஷாலுவின் உத்தரவின் பேரில் கொலை நடந்ததாக விஷால் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். மாமனாரை கொலை செய்ய ரூ.6 லட்சம் தருவதாக ஷாலு கூறியதாகவும், இதில் ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மீதமுள்ள ரூ.4 லட்சத்தை 15 நாட்களுக்குப் பிறகு தருவதாக அவர் கூறியிருந்தார்.
ஷாலு வீட்டின் டூப்ளிகேட் சாவியை ஏற்பாடு செய்து விஷாலிடம் கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று ஷாலு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இரவு விருந்துக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் விஷாலும் ராஜ் கிஷோரும் வீட்டுக்குள் நுழைந்து வினீத் மினோச்சாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாமனார் வீட்டுக்குள் நடப்பவற்றை சிசிடிவி மூலம் கண்காணித்ததுடன், இரவு விருந்துகள் மற்றும் தாமதமாக வீடு திரும்புவதையும் எதிர்த்ததாக ஷாலு விசாரணையில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். Kanpur murder case விசாரணையில், ஷாலு முதலில் போலீஸாரைத் தவறாக வழிநடத்த முயன்றதாகவும், பின்னர் குற்றத் தொடர்பை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.





























