மது அருந்தியது தொடர்பான தகராறு கொலையில் முடிந்தது
மணிப்பூரைச் சேர்ந்த விக்ரம் சிங், டெல்லி அருகிலுள்ள கிலோகரி கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டின் அருகே இருந்த ஹோட்டல் ஊழியர்களும் டெலிவரி பணியாளர்களும், வீட்டிற்கு வெளியே அமர்ந்து மது அருந்தியதாகவும் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட இடையூறு குறித்து விக்ரம் சிங் அவர்களிடம் சத்தத்தைக் குறைக்கவும், தனது வீட்டின் அருகே மது அருந்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரை பலர் சேர்ந்து தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பலத்த காயமடைந்த விக்ரம் சிங்கை அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த Delhi singer Vikram Singh murder சம்பவம் தொடர்பாக பாரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), தீபன்சு (21), மோகன் விஸ்வகர்மா (32), விஜய் (36), மன்னு (26) மற்றும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வடகிழக்கு மாணவர் சங்கம் சம்பவத்தைக் கண்டித்துள்ளது. விரைவான, நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.































