Tag: Political News
கிட்டத்தட்ட ஒரு மாத கால அரசியல் பதற்றம் மற்றும் வாக்கு எண்ணிக்கை சர்ச்சைகளுக்கு பிறகு கெய்கோ புஜிமோரி பெருவின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிகக் கடுமையான போட்டியில் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஜூன் 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் கெய்கோ புஜிமோரி 50.135% வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் 49.865% வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 50,000 மட்டுமே என்பதால் இந்தத் […]
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு முன் அது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல முந்தைய அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம் […]
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எளிமையாக இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை நசுக்கி வருவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதன்மை சக்தியாக விவசாயிகள் விளங்கினாலும் இன்று அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். விவசாய உற்பத்திக்குத் தேவையான உரம், விதைகள் மற்றும் ஏனைய உள்ளீடுகளின் […]
இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மாகாண சபை முறைமை முடக்கப்பட்டிருப்பதால் மக்களின் அரசியல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]
கோத்தாபய ராஜபக்ச மனு தொடர்பாக இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனம் அதிகரித்துள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்யும் அபாயம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் writ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா, CID சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி […]
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் […]
டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்கம் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டின் வெளிநாட்டு கடன்களை ரூபாய் மதிப்பில் மீளச் செலுத்த வேண்டிய சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதன் […]
சுரேஷ் சல்லாய் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லாய் மீது தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் விளக்கத்தின்படி CID காவலில் இருந்த காலத்தில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் மருத்துவ கவனிப்புகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை […]
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறிய அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் தவறான பொருளாதார மற்றும் நிதி நிர்வாக நடவடிக்கைகள் […]
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கம் டொலர் பெறுமதி உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆடை இறப்பர் ஏற்றுமதித் துறைகளின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் மக்களின் ஆதரவை இழந்துள்ள அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் அரசாங்கத்துக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் […]