வவுனியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையின் கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில்,வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





Leave a Reply