நாடு முழுவதும் மூளைக்காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 250 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடல்நலக் குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூளைக்காய்ச்சல் தொடர்பான நிலைமையை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்று தொடர்பான மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.





Leave a Reply