இலங்கையில் வாகன இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் பாதித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அரோஷா ரொட்ரிகோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போது அமலில் உள்ள 50% கூடுதல் வரி வாகன நிதியுதவி (Leasing) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி நடைமுறைகள் சந்தையின் இயல்பான செயல்பாட்டை சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.குறிப்பாக மத்திய வங்கியின் விதிமுறையின்படி வாகனத்தின் பெறுமதியின் 40% மட்டுமே லீசிங் வசதி வழங்கப்படுவது பல வாங்குபவர்களுக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பை குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மாற்றாக இறக்குமதி செய்யும் கட்டத்தில் L.C. Margin System நடைமுறையை பரிசீலிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் வாகனங்கள் துறைமுகத்தில் விடுவிக்கப்படும் நேரத்தில் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைப்பதால் இந்தத் துறைக்கு சாதகமான கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் அரசின் வருவாயும் அதிகரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு எவ்வாறு பதிலளிக்கிறது என்பது, எதிர்காலத்தில் இலங்கையின் வாகன இறக்குமதி சந்தை, வாகன விலைகள் மற்றும் பொதுமக்களின் கொள்முதல் திறன் ஆகியவற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








Leave a Reply