நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மூன்று மாதங்களுக்குள் சுங்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளாவிடின் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை தளர்த்துமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய மோசமான வானிலை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக வாகன விற்பனை மந்தகதியில் உள்ளதால், இந்த அபராதச் சுமை இறக்குமதியாளர்களைப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading