MAY (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் உள்ளிட்ட பல உணவு வகைகளின் விலைகள் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சிற்றுண்டி வகைகளின் விலைகளும் 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முட்டை ரொட்டி மற்றும் பராட்டா போன்ற உணவுகளின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 25% முதல் 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி வருவதாகவும் தற்போதைய அதிக செலவின சூழ்நிலையில் அந்தச் செலவுகளை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





Leave a Reply