நாட்டின் மருந்து விநியோகத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலை கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நලிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, மக்களுக்கான மருந்துகளின் விலை நியாயமானதாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதே நோக்கமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பல மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறையும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அளவுக்கு மீறிய லாப விகிதங்களை கட்டுப்படுத்தவும், தேவையற்ற விலை உயர்வுகளைத் தடுக்கவும் புதிய விலை கட்டுப்பாட்டு அமைப்பு உதவும் எனவும் அவர் தெரிவித்தார். மருந்து வணிக துறையில் கண்காணிப்பை வலுப்படுத்துவதன் மூலம் அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க உறுதிசெய்யப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.





























Leave a Reply