நாடளாவிய ரீதியில் ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவற்றின் விலை உறுதிப்பாடு தொடர்பில் எழுந்துள்ள கவலைகளைக் தீர்ப்பதற்காக இலங்கை உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த ஆகியோர் தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது,
முக்கிய உணவுப் பொருட்களின் கையிருப்பு மற்றும் அனர்த்தத்திற்குப் பிந்தைய காலத்தில் திடீர் விலை உயர்வுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது,
விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை நியாயமாகக் காட்டி சில வர்த்தகர்கள் செயற்கையாக விலைகளை உயர்த்த முயற்சிப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு விநியோக அழுத்தத்தைக் குறைப்பதற்காக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் என்பன பரிசீலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பின்னர் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு அங்காடி வலையமைப்புகள் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய மீட்பு முயற்சிகள் தொடர்வதால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சந்தை நடத்தையைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் எனவும் இலங்கை உணவுப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.





Leave a Reply