பணவீக்கம் உயர்வு இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான மொத்த பணவீக்க விகிதம் (CCPI) ஜூன் மாதத்தில் பதிவான 6.8 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி உணவுப் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் சற்றே குறைவடைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த இந்த விகிதம், ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவினங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதே நேரத்தில் உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள சிறிய சரிவு சில துறைகளில் விலை அழுத்தம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. அரசு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் பணவீக்க நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.













Leave a Reply