பிரான்சில் ஹண்டா வைரஸ், மாஸ்க் விற்பனை திடீர் அதிகரிப்பு

பிரான்சில் ஹண்டா வைரஸ் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில் FFP2 மாஸ்க் விற்பனை கடந்த சில நாட்களில் பெரிதும் உயர்ந்துள்ளது. அரசு நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவித்துள்ள போதிலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் மாஸ்க் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

வழக்கமாக வாரத்திற்கு சுமார் 2,400 பெட்டிகள் விற்கப்படும் நிலையில் மூன்று நாட்களில் 15,000 duckbill வடிவ FFP2 மாஸ்க் பெட்டிகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு பெட்டியின் விலை 5 யூரோவில் இருந்து 7 யூரோவாக உயர்ந்துள்ளது.

பிரான்சில் தற்போது 26 தொடர்புடைய நபர்கள் மருத்துவ தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இதுவரை நெகட்டிவ் என பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பரிசோதிக்கப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading