Travel News, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பயணிகள் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விமானம் ரயில் பேருந்து கப்பல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்பவர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதும் இழப்பீடு கோருவதும் எளிதாகும் வகையில் புதிய இடைக்கால அரசியல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது European Parliament மற்றும் Council of the European Union இடையே எட்டப்பட்டுள்ள நிலையில் இது இன்னும் இறுதி சட்ட அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளது.
புதிய விதிகளின்படி, Travel News ஆன்லைன் பயண முகவர்கள் அல்லது டிக்கெட் விற்பனை தளங்கள் மூலம் விமான டிக்கெட் வாங்கியிருந்தாலும் பயணம் ரத்து செய்யப்பட்டால் முழு டிக்கெட் தொகையையும் வசூலிக்கப்பட்டிருந்தால் சேவை கட்டணத்தையும் 14 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இடைநிலை நிறுவனம் காலக்கெடுவுக்குள் பணத்தை வழங்கத் தவறினால் அதன் பின்னர் விமான நிறுவனம் நேரடியாக பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பை ஏற்கும்.
மேலும் விமானம் பேருந்து மற்றும் கடல் போக்குவரத்து பயணிகளுக்காக இழப்பீடு அல்லது பணத்தைத் திரும்பக் கோருவதற்கான ஒரே மாதிரியான விண்ணப்பப் படிவம் அனைத்து EU மொழிகளிலும் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அல்லது குறைந்த இயக்கத் திறன் கொண்ட பயணிகளுக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் அவர்களுடன் வரும் உதவியாளர் இலவசமாக பயணம் செய்யும் உரிமையும் உறுதி செய்யப்படுகிறது.
இந்த மாற்றங்களின் நோக்கம் பயணிகள் தங்களுக்குரிய உரிமைகளை நடைமுறையில் எளிதாகப் பயன்படுத்த முடிவதை உறுதி செய்வதாகும். இருப்பினும் இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வராது. European Parliament மற்றும் Council of the European Union ஆகியவற்றின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகே அவை நடைமுறைக்கு வரும்.










Leave a Reply