அந்த அறிக்கையின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான நல்வாழ்வு சுற்றுலா ஆர்வம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆயுர்வேத சிகிச்சைகள், இயற்கைச் சூழல், யோகா மற்றும் தியான மையங்கள், அமைதியான கடற்கரைகள் மற்றும் மலையகப் பகுதிகள் போன்றவை உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளை ஈர்க்கும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் உலகளாவிய நல்வாழ்வு சுற்றுலா துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும் 2027ஆம் ஆண்டுக்குள் அதன் மதிப்பு 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றிருப்பது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரிய ஊக்கமாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.



























