சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதால் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (04) முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (05) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாகன சாரதிகள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்