இதன் தாக்கத்தால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் அதேபோல் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் அதாவது அடுத்த ஏழு நாட்களுக்குள் இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக மாறும் சாத்தியம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே கடல்சார் ஊழியர்கள், மீனவர்கள், கடற்றொழில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த உத்தியோகபூர்வ முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






























