நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – பலத்த காற்று மற்றும் கடும் கடலலைகள் தொடரும்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) நிறத்திலான விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் வடகிழக்கு திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த […]
