தகவல்களின்படி ஊர்வலத்திற்காக கொண்டு வரப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை இன்று காலை ஆற்றங்கரைக்கு தண்ணீர் கொடுக்க உதவியாளர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை அவரைத் தாக்கி மிதித்ததாக கூறப்படுகிறது. உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு விரைந்த யானைப் பாகனையும் அந்த யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவத்திற்குப் பின்னர் யானை அருகிலுள்ள வயல்வெளிக்குள் ஓடிய நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து சென்று மயக்க மருந்து செலுத்தி யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
































