Tag: இலங்கை
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தனிநபர்களை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் […]
இலங்கை மோட்டார் சைக்கிள் விலை தொடர்பான விதிமுறைகளை மீறிய மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெட்டிபொல பகுதியில் இயங்கி வந்த மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று விற்பனையாளர்களும் விற்பனை நிலையங்களில் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை முறையாக காட்சிப்படுத்தத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் இரண்டு விற்பனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நிர்ணயித்த […]
வெள்ளவத்தை மற்றும் பாமங்கட பகுதிகளில் இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை 7 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை NWSDB அறிவித்துள்ளது. கொழும்பு பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை முதலீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த நீர்தடை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் […]
மூதூரில் கோர விபத்து, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் […]
முன்னாள் IGP பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் IGP புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நிரந்தர விசாரணை நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உரிய முறையில் கையாளத் தவறியதாலும் தங்களது […]
போதைப்பொருளுடன் இளைஞர் கைது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.8 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பயணப்பொதியை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது மொத்தம் 1.480 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ […]
நாமல் ராஜபக்சாவின் 2019 திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2.68 மில்லியன் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை உச்சநீதிமன்றம் டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. வழக்கறிஞர் விஜித குமார தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வழங்கப்பட்ட மின்சார சேவைக்கான மொத்த கட்டணம் ரூ.2,682,246.57 […]
யாழ்ப்பாண மருத்துவமனை, யாழ்ப்பாணத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்று முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான ரூ.400 க்கு பதிலாக ரூ.550 வசூலித்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் ஜூலை 13 அன்று மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 21 அன்று வழக்கு […]
இலங்கை ஆசிரியர் பிகினி போட்டி, ஆசிரியர் ஒருவர் பிகினி அணிந்து மலேசியாவில் நடைபெற்றதாக கூறப்பட்ட சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்ற சமூக ஊடகங்களில் பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது என உண்மைச் சரிபார்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. Fact Crescendo Sri Lanka மேற்கொண்ட விசாரணையின்படி அந்தப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள பெண் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் குவாத்தமாலாவின் Alta Verapaz மாகாணத்தில் உள்ள San Juan Chamelco பகுதியைச் சேர்ந்த Jeyme Stefanyh Hernández […]
அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]