முன்னாள் IGP பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் IGP புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நிரந்தர விசாரணை நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உரிய முறையில் கையாளத் தவறியதாலும் தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததாலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
2019 ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்ததுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அந்த தாக்குதல் இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எனினும் இலங்கையில் 1976 முதல் மரண தண்டனை நடைமுறையில் அமல்படுத்தப்படாத நிலையில் இருப்பதால் இந்த தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது என்பதும் இருவருக்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.













Leave a Reply